Sunday, January 31, 2010

BJP மாநில தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன்

BJP மாநில தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் பேச்சுக்கு பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா கடும் கண்டனம்

வேலூர் கோட்டை பள்ளிவாசல் விசயத்தில் முஸ்லிம்களின் நியாயமான வழிபாட்டு உரிமையை திசை திருப்ப முயலும் பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில தலைவர் கண்டனம்.



வேலூர் கோட்டைக்குள் இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள மசூதியில் தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் என்பது முஸ்லிம்களின் நீண்ட கால கோரிக்கை. இந்த நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி முஸ்லிம்கள் பல்வேறு போரட்டங்களை நடத்தி இருக்கின்றார்கள். இன்னும் தொடர்ந்து நடத்திக் கொண்டும் இருக்கின்றார்கள். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு. தொல். திருமாவளவன் M.P அவர்கள் 20-1-2010 அன்று வழிபாட்டு உரிமை என்பது ஜனநாயக உரிமை என்பதை வலியுறுத்தி வேலூரில் போராட்டம் நடத்தி உள்ளார்கள். இது மிகவும் வரவேற்கத்தக்கது.



ஒடுக்கப்பட்டோர்களுக்காகவும், உரிமை மறுக்கப்பட்டோர்களுக்காகவும் அவர்களின் ஜனநாயக உரிமையை மீட்டுக் கொடுப்பதற்காக அல்லது அவர்களின் உரிமை போரட்டத்திற்கு ஆதரவு கொடுப்பதற்காக, அரசியல் கட்சி தலைவர்கள் ஜனநாயக வழியில் அறப்போராட்டங்கள் நடத்துவதை மத உணர்வை தூண்டும் செயல் என்று பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது அறப்போராட்டத்தையும், நியாயமான கோரிக்கைகளையும் திசைதிருப்பும் செயல். எனவே, இதனை பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கின்றது.

No comments:

Post a Comment